சமுதாயம்

2024 பாபா வங்கா கணிப்பு! நடந்து என்ன? அதிர்ச்சியில் உலக மக்கள்!

2024 தொடர்பில் கண் தெரியாத தீர்க்கதரிசி பல்கேரிய பாபா வங்கா கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளமை உலக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 இலபல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது பல்கேரிய பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்.
பாபா வங்கா யார்?
பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. இவர் 1996லேயே இறந்துவிட்டார். பிறகு ஏன் இவரின் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று கேட்கிறார்களா? இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார்.
இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது. அந்த சம்பவத்தின் பின்னரே அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி உள்ளார். கடவுள் தனக்கு கொடுத்த சக்தி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை பாபா வங்கா எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். அவரது கணிப்புக்கள் இதுவரை உலகின் பல முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்களை பாபா வங்கா கணித்து உள்ளாராம்.


2024ல் என்னென்ன நடக்கும்?
இந்த நிலையில் 2024ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து அட்டாக் செய்யும். இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளாராம்.


அதோடு சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியது என்று தெரிவித்துள்ளார் . அதாவது புடின் மரணம் பற்றி கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத “பெரிய நாடு” உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும் . அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாடக்கும் என்றுள்ளார்.
. கடன் அளவுகள் உயரும் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர். புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்கும்.. உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்று நடக்கும்.

ஏலியன்களை மனிதர்கள் காண்பார்கள்….2024 இல் பதிவான இரு சம்பங்கள்
அதுமட்டுமல்லாது இதே வருடம் நாம் ஏலியன்களை காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளன.

அதேவேளை வேற்று கிரக வாசிகளின் வருகையும் , ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும் பாபா வாங்கா கணிப்பை உறுத்தியாக்கியுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் உலக் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Back to top button